மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம்: கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நூதன தடை விதிப்பு
பேட்ரிக் கைது செய்யப்பட்டபோது தனது வாழ்வில் மிகவும் பலனளிக்கும் மற்றும் பயனுள்ள அனுபவம் என்று கூறினார்
முன்னதாக, புதிய போலி மன்னருக்கு தலை வணங்க மாட்டேன் என ராணி இறந்தபோது பேட்ரிக் ட்வீட் செய்திருந்தார்
பிரித்தானியாவின் யார்க்ஷயர் பகுதியில் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன தடை விதிக்கப்பட்டுள்ளது.
யார்க்ஷயர் பகுதியில் மன்னர் சார்லஸ், கமிலா தம்பதி பொதுமக்களை சந்திக்க சென்றபோது, அவர்களை தாக்கும் நோக்கில் இளைஞர் ஒருவர் முட்டைகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பேட்ரிக் தெல்வெல்(23) எனும் அந்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதியப்பட்டது.
Alamy
இந்த நிலையில் பேட்ரிக் தெல்வெலுக்கு நூதன தடைகளுடன் பிணை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது குறித்த இளைஞர் பொது இடங்களில் முட்டைகளை எடுத்துச் செல்லக் கூடாது.
அத்துடன் மன்னரிடம் இருந்து குறைந்தபட்சம் 500 மீற்றர் தொலைவில் அவர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக பேட்ரிக் கூறியுள்ளார்.
PA
ஆனால் அவர் மளிகை கடைக்கு செல்லலாம் என பின்னர் மாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக வலைதள குறுந்தகவல்கள் வாயிலாக தவறான செய்திகள் வந்ததாகவும், அவற்றில் கொலை மிரட்டல்களும் அடங்கும் என்றும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சட்டப்பிரிவு 4-யின் படி பேட்ரிக் மீது ஒழுங்கு மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, டிசம்பர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார்.