கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்: திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம்

Gujarat Australia
By Balamanuvelan Jul 30, 2026 06:14 AM GMT
Report

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தன் கணவர் அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாகக் கூறி பெண்ணொருவர் அவரது குடும்பத்தினரை ஏமாற்றிவந்த நிலையில், தற்போது அவரது குட்டு வெளிப்பட்டுள்ளது.

கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்

குஜராத்திலுள்ள ஜாம்நகர் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஜிக்னேஷ் மாவடியா. ஜிக்னேஷின் மனைவி ப்ரித்வி.

கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்: திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம் | Man Buried By Wife Family Believed He Was In Aus

ஜிக்னேஷின் குடும்பத்தினர் அவர் இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாக நம்பிக்கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்று ஜிக்னேஷ் தங்கியிருப்பதாக கூறப்பட்ட முகவரியில் அவரைத் தேடும்போதுதான் தெரிந்துள்ளது அவர் அவுஸ்திரேலியாவில் இல்லை என்பது. 

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை - பெண்களை குறிவைத்து நடந்த மோசடி

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை - பெண்களை குறிவைத்து நடந்த மோசடி

சந்தேகம் எழவே, ஜிக்னேஷின் சகோதரர் பொலிசில் புகாரளிக்க, பொலிஸ் விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம்

ஆம், ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வியும், ப்ரித்வியின் காதலனான நிலேஷ் என்பவரும் சேர்ந்து ஜிக்னேஷுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து அவரைக் கொன்றுள்ளார்கள்.

பின்னர் திரைப்படம் ஒன்றில் வரும் காட்சி ஒன்றைப்போல, அவரது உடலை தொழிற்சாலை ஒன்றிற்குக் கொண்டு சென்று, அங்கு 12 முதல் 15 அடி ஆழமுள்ள ஒரு குழியைத் தோண்டி, ஜிக்னேஷ் உடலை புதைத்துள்ளார்கள். 

கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்: திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம் | Man Buried By Wife Family Believed He Was In Aus

இரண்டு ஆண்டுகளாக ஜிக்னேஷ் அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதாகவும், மொபைல் பயன்படுத்த அவர் வேலை செய்யும் நிறுவனம் அனுமதியளிக்கவில்லை என்றும் கூறி, ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வி அவரது குடும்பத்தினரை ஏமாற்றி வந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தகவல்களைத் தொடர்ந்து, ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வியும், ப்ரித்வியின் காதலனான நிலேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் அடையாளம் காட்டிய தொழிற்சாலையிலிருந்து ஜிக்னேஷின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

திரைப்பட பாணியில் பெண்ணொருவர் தன் கணவரைக் கொன்று புதைத்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US