பிரித்தானியா விமானநிலையத்தில் சூட்கேசுடன் அதிகாரிகளிடம் சிக்கிய நபர்! உள்ளே என்ன இருந்தது தெரியுமா? விசித்திர சம்பவம்
பிரித்தானியாவில் விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் பிடிபட்ட நபரின் சூட்கேஸில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட சிகரெட்டுகள் இருந்த நிலையில், அதற்கு அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Rugby நகரைச் சேர்ந்தவர் Bojkin. 56 வயது மதிக்கத்தக்க இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு Slovakia-வில் இருந்து பிரித்தானியாவிற்கு திரும்பிய போது Luton விமானநிலையத்தில், சுங்க அதிகாரிகளால் நிறுத்தப்பட்டார். அப்போது அவரின் பெரிய சூட்கேஸில் சிறிய ரக சிகரெட் பாக்கெட்டுகள் நிரப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதை சரியாக சோதனை செய்து பார்த்த போது, மொத்தமாக 19,840 சிகரெட்டுகள் இருந்தன.இது குறித்து அதிகாரிகள் கேட்ட போது, இந்த சிகரெட்டுகள் அனைத்தும், தனக்கும், தன்னுடைய குடும்பத்தினரின் பயன்பட்டிற்காகவே என்று கூறியுள்ளார்.
இதை நான் விற்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொண்டு வரவில்லை என்று மறுத்துள்ளார். ஏனெனில் இந்த சிகரெட்டுகளை நாட்டிற்குள் முறைப்படி, ஒரு வணிக நோக்கத்திற்காக கொண்டு வந்தால், 5,817.78 பவுண்ட் வரி செலுத்த வேண்டும்.
அவரோ, நான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட்தாகவும், மருத்துவ காரணங்களுக்காக பிரித்தானியா திரும்புவதாக கூறியுள்ளார். மேலும், அவர் குளிர்காலத்தை இங்கி செலவிட்டுவிட்டு, கோடை காலத்தில் மீண்டும் Slovakia-விற்கு செல்லவேன் என்று கூறியுள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசிப்பதாக கூறிய அவர், அவப்போது Slovakia-விற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதையடுத்து அவர் இந்த வார துவக்கத்தில் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் தனக்கும், தன்னுடைய மனைவிக்கும் இடையே நாள் ஒன்றிற்கு ஐந்து பாக்கெட் சிகரெட்டுகள் புகைப்போம். Slovakia-வின் விலை மலிவு என்பதால், அங்கு அதிக அளவு சிகரெட்டுகள் வாங்கினேன்.
நான் இதைக் இங்கு விற்பனைக்காக கொண்டு வரவில்லை. குளிர்காலத்தில் நான் இப்படி மொத்தமாக சிகரெட்டுகள் வாங்குவேன், இது நான்கு முதல் ஐந்து மாதங்கள் நீடித்திருக்கும் என்று கூறியுள்ளார்.
ஆனால், Bojkin சிக்குவது இது முதல் முறையல்ல எனவும், இதற்கு முன்பு அவரிடம் இருந்து இது போன்று சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என உறுதி செய்தது. இருப்பினும் தீர்ப்புக்கான நாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் Bojkin-க்கும் ஜாமீன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.