லண்டனில் இரயிலுக்கு இடையில் உடல் நசுங்கி உயிரிழந்த நபர்! நடந்தது என்ன? கொடூர விபத்தின் முழு பின்னணி
லண்டனில் பிளாட்பார்ம் மற்றும் இரயிலுக்கு இடையில் விழுந்து நசுங்கி உயிரிழந்த சம்பம் தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கிழுக்கு லண்டனைச் சேர்ந்த 59 வயது மதிக்கத்தக்க Jama Mohamed Warsame என்ற நபர் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் திகதி Lambeth-ல் தங்கிவிட்டு, வீடு திரும்புவதற்காக புறப்பட்டுள்ளார்.
அப்போது தான் இங்கிலாந்தில் கொரோனாவிற்கான முதல் ஊரடங்கு போடப்பட்டிருந்தது.
இதற்காக அவர் சுரங்க இரயிலில் பயணித்துள்ளார். சம்பவ தினமான அன்று அவர், தான் இறங்கும் இடம் வந்த பின்பு இரயிலை விட்டு வெளியேற சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் போராடியுள்ளார்.
அப்போது ஊரடங்கு என்பதால், அங்கு இரயில்வே ஊழியர்களோ, மக்களோ அதிகம் இல்லை.
இதற்கிடையில் அவர் தன்னுடைய கை அசைவின் மூலம் தெரிவிக்க முயன்றார், ஆனால் இரயில் புறப்பட, அவர் இறங்க முற்பட, இரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் விழுந்துவிட்டார்.
இதனால் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் விழுந்து கிடந்த 85 விநாடிகளுக்கு இந்த கொடூர விபத்து குறித்தரயில் விபத்து புலனாய்வு பிரிவு (RAIB) வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த Jama Mohamed Warsame, இரயிலில் இருந்து இறங்கும் போது தடுமாறினார்.
அன்று காலை 10.10 மணியளவில் இரயில்வே நிலையத்தில் உள்ள பிளார்பார்மிற்கு இடையில் விழுந்துவிட்டதாக்வும், அந்த நேரத்தில் அவருக்கு உதவவோ, அல்லது ஒரு அபாய அலாரத்தை எழுப்பவோ யாரும் அங்கு வரவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.