குற்றவாளியை பிடிக்க முயன்ற போலீசார்! கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு
தமிழகத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடிக்க முயன்ற போது, கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பானது.
சேலத்தின் மேட்டூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமமூர்த்தி(45).
இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி, ஆள்கடத்தல் ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராமமூர்த்தி இன்று போலீசார் பிடிக்க முயன்ற போது, தன்னுடைய கத்தியை எடுத்து மிரட்டியுள்ளார்.
மேலும், அவரே கழுத்தை அறுத்துக் கொண்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை சமாதானப்படுத்தி கத்தியை பிடுங்கினர், தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதேபோன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் ராமமூர்த்தியை போலீசார் பிடிக்க முயன்றபோது தனது கையை வெட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.