காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல்
தனது ஸ்வீடிஷ் மனைவியைச் சந்திக்க இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சைக்கிளில் சென்ற இந்தியரின் காவியக் காதல் கதையை தெரிந்துகொள்ளுங்கள்.
ஸ்வீடனைச் சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் (Charlotte Von Schedvin) 1975-ஆம் ஆண்டு டெல்லியில் இந்தியக் கலைஞர் பிகே மகாநந்தியாவைச் சந்தித்தார். அவர்களது சந்திப்பு ஏதேச்சையாக நடக்கவில்லை.
மகாநந்தியாவின் கலையைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, ஷெட்வின் ஸ்வீடனில் இருந்து இந்தியாவுக்கு சென்றார். மேலும் தனது உருவப்படத்தை மகாநந்தியாவின் கையால் உருவாக்க முடிவு செய்தார்.
PHOTOGRAPH BY STEFAN VOLK, LAIF, REDUX
அப்போது மகாநந்தியா ஒரு கலைஞராக தனக்கென ஒரு பெயரை உருவாக்கத் தொடங்கினார். இவர் டெல்லியில் உள்ள கலைக் கல்லூரியில் ஒரு ஏழைக் கலைக்கல்லூரி மாணவராக இருந்தார்.
மகாநந்தியா ஷெட்வின் உருவப்படத்தை உருவாக்கும் போது இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். அவல் அழகில் அவன் மயங்கினான், அவனுடைய எளிமையில் அவள் காதலில் விழுந்தாள்.
வான் ஷெட்வின் இந்தியாவை விட்டு சொந்த நாட்டுக்கு வெளியேற வேண்டிய நேரத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மகாநந்தியாவின் குடும்பத்தினரின் ஆசியுடன், பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
PK MAHANANDIA
அவள் கிளம்பும் நேரம் நெருங்கிவிட்டதால், தன் கணவனைத் தன்னுடன் வரச் சொன்னாள். இருப்பினும், மகாநந்தியா முதலில் தனது படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. ஸ்வீடிஷ் ஜவுளி நகரமான போராஸில் உள்ள அவரது வீட்டிற்கு விளைவில் வந்து சந்திப்பதாக அவர் உறுதியளித்தார்.
இருவரும் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தனர்.
ஒரு வருடத்திற்குப் பிறகு, வான் ஷெட்வினைப் பார்க்க அவர் திட்டமிட்டபோது, விமான டிக்கெட் வாங்குவதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்பதை உணர்ந்தார். தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று சைக்கிள் வாங்கினான்.
PK MAHANANDIA
அடுத்த நான்கு மாதங்களில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைக் கடந்தார். வழியில் அவரது சைக்கிள் பல முறை பழுதடைந்தது, மேலும் அவர் பல நாட்கள் உணவின்றி செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவரது காதலை எதுவும் உடைக்க முடியவில்லை.
அவர் ஜனவரி 22, 1977-ல் தனது பயணத்தைத் தொடங்கினார், மேலும் அவர் தினமும் சுமார் 70 கிமீ சைக்கிள் ஓட்டுவார்.
வழியில் மக்களின் உருவப்படங்களை உருவாக்கி சிறிது பணம் ஈட்டினார், பலர் அவருக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்து உதவினர்.
PK MAHANANDIA
அவர் மே 28 அன்று இஸ்தான்புல் மற்றும் வியன்னா வழியாக ஐரோப்பாவை அடைந்தார், பின்னர் ரயிலில் கோதன்பர்க் சென்றார்.
இருவரும் சந்தித்தபிறகு அதிகாரப்பூர்வமாக ஸ்வீடனில் திருமணம் செய்து கொண்டனர்.
PK MAHANANDIA
"ஐரோப்பிய கலாச்சாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எனக்கு புதியது, ஆனால் அவள் ஒவ்வொரு அடியிலும் என்னை ஆதரித்தாள். அவள் ஒரு சிறப்பு நபர். நான் 1975 இல் இருந்ததைப் போலவே நான் இன்னும் காதலிக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
இந்த ஜோடி இப்போது தங்கள் இரண்டு குழந்தைகளுடன் ஸ்வீடனில் வசிக்கிறது, மேலும் அவர் தொடர்ந்து ஒரு கலைஞராக பணியாற்றுகிறார்.
PK MAHANANDIA
PK MAHANANDIA
PK MAHANANDIA
PK MAHANANDIA