சிவபெருமான் போல விஷப்பாம்பை கழுத்தில் சுற்றி கொண்டு ஜாலியாக வலம் வந்த நபருக்கு நேர்ந்த கதி
இந்தியாவில் சிவபெருமான் போல கழுத்தில் பாம்பை சுற்றி வலம் வந்தவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் சஞ்சய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது சேர். அவர் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள மார்கெட்டிற்கு சென்ற போது அங்கு ஒரு பாம்பை கண்டார்.
பின்னர் இவர் அந்த பாம்பை தன் கையால் பிடித்து அதனை கழுத்தில் சிவபெருமான் போல போட்டு கொண்டு மார்கெட்டை சுற்றி வந்துள்ளார்.
அப்பொழுது பாம்பு அவரை மூன்று முறை தீண்டியுள்ளது. அப்பொழுது அவரது நண்பர் அவரை தடுக்காமல் தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து முகம்மது ஷேக் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துமவனைக்கு அழைத்து சென்றபோது முகம்மது ஷேக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விளையாட்டாக தான் வைரலாக வேண்டும் என்ற நோக்கில் முகம்மது செய்த செயலால் அவர் உயிர் பறிபோகியுள்ளது.