நடுசாலையில் கணவருக்கு நெஞ்சுவலி - மனைவி உதவி கேட்டு கெஞ்சியும் யாரும் உதவாததால் பலி

Heart Attack Bengaluru
By Karthikraja Dec 17, 2025 09:20 AM GMT
Report

நடுசாலையில் கணவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மனைவி உதவி கேட்டு கெஞ்சியும் யாரும் உதவாததால் அவரது கணவர் உயிரிழந்துள்ளார்.

நடுசாலையில் மாரடைப்பு

கர்நாடக மாநிலம், தெற்கு பெங்களூருவின் பாலாஜி நகரில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தவர் 34 வயதான வெங்கடரமணா. 

நடுசாலையில் கணவருக்கு நெஞ்சுவலி - மனைவி உதவி கேட்டு கெஞ்சியும் யாரும் உதவாததால் பலி | Man Dies Heart Attack In Road All Denies To Lift

இவருக்கு 2020 ஆம் ஆண்டில் ரூபா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 5 வயது மகனும், ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.

அதிகாலை 3.30 மணியளவில், வீட்டில் இருக்கும் போது வெங்கடரமணாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனடியாக தங்களது இரு சக்கர மோட்டார் வாகனத்தில், கத்ரிகுப்பே ஜனதா பஜார் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாததால், அருகிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.

அந்த மருத்துவமனையில், ECG-யில் லேசான மாரடைப்பு இருப்பது தெரியவந்தது. இருப்பினும், அங்கு முதன்மை சிகிச்சை அளிக்கப்படவில்லை, ஜெயதேவா மருத்துவமனைக்குச் செல்லும்படி தெரிவித்துள்ளனர். 

முதலிடத்தில் தமிழக உணவு.., 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல்

முதலிடத்தில் தமிழக உணவு.., 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல்

ஆம்புலன்ஸ் எதுவும் வழங்கப்படாததால், தங்களது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் ஜெயதேவா மருத்துவமனையை அடைய முயன்றனர்.

கதிரேனஹள்ளி பாலம் அருகே சென்ற போது, ​​வெங்கடரமணாவுக்கு மீண்டும் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதினார்.

கண்கள் தானம்

100 மீட்டர் தூரம் பயணித்த பிறகு, தனது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அவரது மனைவி ரூபா, சாலையில் ஓடும் வாகனங்களை உதவிக்காக கையசைத்து நிறுத்த முயன்றனர். ஆனால் 30 நிமிடங்களுக்கும் மேலாக யாரும் அவருக்கு உதவ நிற்கவில்லை. 

வெங்கடரமணாவின் சகோதரி சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உயிரைக் காப்பாற்ற சாலையின் நடுவில் CPR செய்தார். இறுதியாக ஒரு டாக்ஸி ஓட்டுநர் உதவ வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால், கால தாமதமாகியுள்ளதால் வெங்கடரமணா உயிரிழந்துவிட்டதாக அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரமான சூழலிலும் வெங்கடரமணாவின் கண்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US