பிரித்தானியாவில் சோகத்தில் முடிந்த பொலிஸாரின் கார் துரத்தல்: ஒருவர் பலி, பெண் கவலைக்கிடம்
பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலுக்கு பிறகு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சோகத்தில் முடிந்த காவல்துறையினரின் துரத்தல்
பிரித்தானியாவின் வார்விக்ஷயர்(Warwickshire) பகுதியில் தப்பியோடிய காரை காவல்துறையினர் துரத்திய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் அளித்த தகவல்
திங்கட்கிழமை மாலை சுமார் 5.23 மணியளவில் ஸ்ட்ராட்ஃபோர்ட்(Stratford) அருகே கருப்பு நிற ஆடி(Audi) காரை மடக்கி பிடிக்க வார்விக்ஷயர் காவல்துறையினர் முயன்றுள்ளனர்.
அப்போது பொலிஸாரின் அறிவிப்பை மதிக்காமல் அந்த கார் நிற்காமல் சென்றதை அடுத்து பொலிஸாரும் துரத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
சரியாக மாலை 5.44 மணி அளவில் தப்பியோடிய கருப்பு நிற ஆடி கார் எதிரே வந்த வெள்ளை நிற போர்ட் பூமா(Ford Puma) கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் Ford Puma காரில் வந்த பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் தப்பியோடிய ஆடி காரை ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |