லண்டனில் பொலிசுக்கு பயந்து ஓடி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
பாரில் குடித்துவிட்டு தகராறு செய்ததற்காக பொலிஸாரால் துரத்தப்பட்ட நபர், மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
லண்டன் பிராட்வேயில் உள்ள ஒரு பாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
அந்த பாரில் 33 வயதுள்ள ஒரு இளைஞர், குடிபோதையில் பலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பாரின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சிறிது நேரத்தில் லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அங்கு வந்தனர். ஆனால் தகராறு செய்த அந்த நபர், பொலிஸிடமிருந்து தப்பிப்பதற்காக, மாடி வழியாக பக்கத்து வளாகத்திற்கு சென்று, அங்கிருந்து ஓட முயன்றார்.
அதிகாரிகள் அவரை துரத்திக்கொண்டு மாடிக்கு சென்றபோது, அங்கு அவரைக் காணவில்லை. குடிபோதையில் இருந்த அவர் உயரமான மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து, உதவிக்காக மருத்துவ குழுவை அழைத்த பொலிஸார், வரும்வரை அந்த நபருக்கு முதலுதவி செய்தனர்.
பின்னர் மருத்துவ உதவியாளர்கள் வந்து எவ்வளவோ முயற்சித்த போதிலும், அந்த நபர் 03: 03 மணியளவில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
பின்னர், அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.