பிரித்தானியாவில் விபத்தில் இறந்த நண்பருக்கு அஞ்சலி செலுத்தியவருக்கு 10,000 பவுண்ட் அபராதம்! என்ன செய்தார்? வீடியோவை மூலம் பிடித்த பொலிஸ்
பிரித்தானியாவின் எம்1 சாலையில் நடந்த விபத்தில் இறந்த நண்பருக்கு வானவேடிக்கை அஞ்சலி செலுத்திய நபருக்கு 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எம்1 விபத்தில் இறந்த நண்பருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வானவேடிக்கை கண் காட்சியை ஏற்பாடு செய்த 23 வயது இளைஞருக்கே 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 5 ஆம் திகதி மாலை Derbyshire நகரின் Shirebrook அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து பல புகார் அழைப்புகள் வந்தது.
சம்பவயிடத்திற்கு விரைந்து அங்கிருந்த குழுவைக் கலைத்தோம் என Derbyshire காவல்துறை தெரிவித்துள்ளது.
கூட்டத்தின் சமூக ஊடக வீடியோக்களைப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளரை அடையாளம் கண்டு, அவருக்கு அபராதம் விதித்தோம் என தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோய்களின் போது மரணமடைந்த அன்புக்குரியவர்களுக்காக அஞ்சலி முடியாத எவருக்கும் தனது அனுதாபங்கள் என்று Derbyshire காவல்துறையைச் சேர்ந்த Ch Supt Hayley Barnett கூறினார்.
ஆனால் கொரோனா வைரஸ் பொதுக் கூட்டங்களில் மிகவும் தீவிரமான ஆபத்தாக உள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் அன்புக்குரியவர்களை இழந்துவிட்டனர், மேலும் அவர்கள் சாதாரணமாக செய்யக்கூடிய விதத்தில் கூட அஞ்சலி செலுத்த முடியவில்லை என Ch Supt Hayley Barnett கூறினார்.