பெண்ணை கொலை செய்த நபர்.. நடுரோட்டில் தீ வைத்து எரித்த மக்கள்!
இந்திய மாநிலம் அசாமில் பெண்ணை படுகொலை செய்ததாக கூறி, நபர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் போர் லாலங் காவன் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் பார்தோலய். பெண்ணொருவரை ரஞ்சித் படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவரை விசாரித்த நபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவரது உடலை சிலர் ரகசியமாக புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரித்தபோது, புதைக்கப்பட்ட இடம் தெரிய வந்தது. உடனடியாக ரஞ்சித்தின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது.
அவரது உடல் 90 சதவிதம் எரிந்துவிட்டதாகவும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
iStock