1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு?
1988-ம் ஆண்டில் 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை நபர் ஒருவர் அவரது வீட்டில் கண்டுபிடித்துள்ளார்.
அதன் மதிப்பு எவ்வளவு?
சண்டிகரைச் சேர்ந்த ரத்தன் தில்லன் என்ற நபர் தனது வீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் பழைய பங்குகளைக் கண்டுபிடித்துள்ளார்.
கார் ஆர்வலரான ரத்தன் தில்லனுக்கு பங்குச் சந்தையைப் பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில், இந்த பங்குகளுக்கு இன்னும் மதிப்புள்ளதா என்பதை தெரிந்துகொள்ள ஆவணங்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
அந்த பங்குச் சான்றிதழ்களின்படி, ரிலையன்ஸ் பங்குகள் 1988 ஆம் ஆண்டு ஒரு பங்குக்கு வெறும் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்டன.
இவரின் பதிவு வைரலானதையடுத்து, இந்தப் பங்குகள் யாருடையது மற்றும் அதன் மதிப்பை அவர் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்த விவரங்கள் தொடர்பாக பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதில் பயனர் ஒருவர் ரிலையன்ஸ் பங்குகள் இப்போது ஒவ்வொன்றும் ரூ.1,200க்கு மேல் வர்த்தகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இவரின் கேள்விக்கு பதிலளித்த முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (IEPFA), அவர் இந்த RIL பங்குகளை வைத்திருக்கிறாரா என்பதை எவ்வாறு சரிபார்க்க முடியும் என்பதை விளக்கியது.
அதாவது, பங்குகள் அவரது உரிமையில் இருக்கிறதா அல்லது உரிமை கோரப்படாததால் அவை IEPFA க்கு மாற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க IEPFA வலைத்தளத்தில் உள்ள தேடல் வசதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர்.
We found these at home, but I have no idea about the stock market. Can someone with expertise guide us on whether we still own these shares?😅@reliancegroup pic.twitter.com/KO8EKpbjD3
— Rattan Dhillon (@ShivrattanDhil1) March 11, 2025
மேலும், டைகர் ரமேஷ் என்ற பயனர் ஒருவர், "பல ஆண்டுகளாக RIL ஆல் வழங்கப்பட்ட பல பங்குப் பிரிப்புகள் மற்றும் போனஸ் பங்குகளைக் கருத்தில் கொண்டு, தில்லனின் ஆரம்ப 30 பங்குகள் இன்று சுமார் 960 பங்குகளாக வளர்ந்திருக்கலாம்.
தற்போதைய சந்தை விலையில், இவை தோராயமாக ரூ.11.88 லட்சமாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |