பறக்கும் விமானத்தின் கழிவறையில் ஆணின் சடலம்: பிரித்தானியாவில் சம்பவம்
பறக்கும் விமானத்தில் கழிவறைக்கு சென்ற நபர் நீண்ட நேரமாகியும் திரும்பாத நிலையில், கவலை அடைந்த பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.
மான்செஸ்டர் நோக்கி பயணம்
தொடர்புடைய நபர் கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜனவரி 2ம் திகதி Jet2 விமானம் ஒன்று டெனெரிஃப் பகுதியில் இருந்து மான்செஸ்டர் நோக்கி பயணப்பட்டுள்ளது.
@getty
குறித்த விமானத்தின் கழிவறையிலேயே பயணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த விமானமானது Cork பகுதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,
பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதை அடுத்து விமானமானது Cork விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பயணி சடலமாக மீட்கப்பட்டார் என்றும் இந்த துயரமான நேரத்தில் அந்த பயணியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே அந்த விமானத்தின் பயணி ஒருவர் தெரிவிக்கையில், யாரோ ஒருவர் நீண்ட நேரம் கழிப்பறையில் இருப்பதாகவும், அவர் இறந்திருக்கலாம் என நினைப்பதாகவும் தமது கணவர் தெரிவித்தார் என்றும், துரதிர்ஷ்டவசமாக அவர் சொல்வது போலவே நடந்துள்ளது என்றார்.
சக பயணிகள் மிகுந்த சோகம்
இதனையடுத்து விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கழிவறைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், பாவம் அந்த நபரை முயன்றிருந்தால் காப்பாற்றியிருக்கமால் எனவும் அந்த பயணி தெரிவித்துள்ளார்.
@getty
மேலும், அந்த நபர் தனியாக பயணம் செய்துள்ளார் என்றே தெரியவந்துள்ளது என்றும், நடந்த சம்பவத்தை அடுத்து சக பயணிகள் அனைவரும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம், நடந்த சம்பவத்தால் கார்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து வேறு விமானத்தில் மான்செஸ்டர் சென்றதாகவும், இதனால் நள்ளிரவு 1.30 மணிக்கு விமானம் தரையிறங்கியதாகவும் அந்த பயணி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |