அமெரிக்காவில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி! தாக்குதல்தாரிக்கு நேர்ந்த கதி..பரபரப்பு வீடியோ
அமெரிக்காவின் வெர்ஜினியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு
வெர்ஜீனியாவின் Chesapeake நகரில் உள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில், திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல்தாரியும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பின்னர் 40க்கும் மேற்பட்ட அவசரகால வாகனங்கள் வால்மார்ட் அங்காடிக்கு விரைந்தன.
BREAKING🚨: A mass shooting has occurred at a Walmart in Chesapeake, Virginia. Video we've obtained from Walmart employees outside the store show multiple police cars arriving and also employees recounting what happened. pic.twitter.com/dB4X4ii9yE
— Officer Lew (@officer_Lew) November 23, 2022
செனட்டர் வேதனை
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வெர்ஜீனியா மாநில செனட்டர் லூயிஸ் லூகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது மாவட்டத்தில் உள்ள வெர்ஜீனியாவின் Chesapeake நகரின் வால்மார்ட் அங்காடியில் நடந்த அமெரிக்காவின் சமீபத்திய வெகுசன துப்பாக்கிச் சூடு சம்பவம் என் இதயத்தை நொறுக்கியது.
நம் நாட்டில் பல உயிர்களை பறித்த இந்த துப்பாக்கிச் சூடு வன்முறை தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் வரை நான் ஓய மாட்டேன்' என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சமீப காலங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
@ Twitter/WAVY-TV