9-வது மாடியில் இருந்து விழுந்த மனைவி! காப்பாற்ற போராடிய கணவன்: கமெராவில் பதிவான துயர காட்சி
இந்தியாவில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு பெண் ஒருவர் 9-வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் Ghaziabad-ல் உள்ள Crossings Republik நகரில் இருக்கும் Greenisle அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 13-ஆம் திகதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 9-வது மாடியில் கணவனின் கையைப் பிடித்து தொங்குவது போன்றும், அதன் பின் அவர் அங்கிருந்து கீழே விழுவது போன்றும் வீடியோ வெளியானது.
இதனால் அந்த பெண் யார்? என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இது கணவன்-மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடந்த சம்பவம் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று கணவன் மற்றும் மனைவி இருவருக்குமிடையே சில காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது திடீரென்று அப்பெண் கீழே குதிக்க முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் தன்னுடைய கையை வைத்து, அவரை பிடித்து, அவரை மேலே தூக்க முயன்றுள்ளார்.
ஆனால் இந்த முயற்சியின் போது, அவர் திடீரென்று அங்கிருந்து கீழே விழுந்தார். இதில் மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுத்து, மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த் வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.