கனடாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்தில் தற்போது சிக்கிய நபர்!
கனடாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக தற்போது முன்னாள் காவல்துறை அதிகாரி மீது வழக்கு பாய்ந்துள்ளது.
ஒன்றாறியோவின் பீட்டர்பாரோவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ராபர்ட்சன். முன்னாள் காவல்துறை அதிகாரியான இவர் கடந்த 2006ஆம் ஆண்டு பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான புகார் மற்றும் விசாரணை கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் ராபர்ட்சன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ராபர்ட்சன் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.