லண்டனில் நள்ளிரவில் இரயில் முன்னால் குதித்து உயிரை விட்ட நபர் யார்? பெயர் மற்றும் வயது வெளியானது
லண்டனில் இரயில் முன்னால் குதித்து உயிரை விட்டு நபரின் பெயர் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனின் எலிபண்ட் மற்றும் கேஸ்டில் இரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்த இரயில் முன்னால் நபர் ஒருவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி நள்ளிரவு 11.40க்கு குதித்தார்.
பின்னர் படுகாயமடைந்த அவர் சில நிமிடங்களில் உயிரிழந்தார். அவர் மரணம் தொடர்பான விசாரணை சமீபத்தில் நடக்க தொடங்கிய நிலையில் இறந்தவரின் பெயர் மற்றும் வயது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஜோசப் ஒகோபியா (59) என்பதே இரயில் முன்னர் பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டவர் ஆவார்.
ஜோசப்பின் இறப்புக்கான மருத்துவ காரணம் என 1A பல இடங்களில் காயங்கள் மற்றும் 1 பி ரயிலுடன் மோதியது என வழங்கப்பட்டது.
மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இயற்கைக்கு மாறானவை எனவும் கூறப்பட்டுள்ள நிலையில் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.