மனைவியை கொலைசெய்து சடலத்துடன் இரவு முழுவதும் கணவர்! கூறிய அதிர்ச்சி காரணம்
தமிழக மாவட்ட கன்னியாகுமரியில் வீட்டில் மரியாதை இல்லாததால் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சடலமாக கிடந்த மனைவி
கன்னியாகுமரியின் பாலப்பள்ளத்தைச் சேர்ந்தவர் டார்வின் (46). இவருடைய மனைவி பபிதா நித்ய செல்வி (39).
நேற்று காலையில் இருந்து மாலை வரை டார்வினின் வீடு திறக்கப்படவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டிற்குள் எட்டி பார்த்துள்ளனர்.
அப்போது சடலமாக கிடந்த மனைவி பபிதா அருகே டார்வின் பதற்றத்துடன் இருந்துள்ளார். உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரியாதை கிடைக்காததால் கொலை
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பபிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் டார்வினை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரத்தில் கழுத்தை நெரித்தும், துணியால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததாக கூறியிருக்கிறார்.
மேலும், வீட்டுடன் மாப்பிள்ளையாக இருந்ததால் மரியாதை கிடைக்காததால் மனைவியுடன் சண்டையிட்டதாகவும், கொலைக்கு அதுதான் காரணம் என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |