பஞ்சாப் கோர்ட் குண்டு வெடிப்பில் மரணமடைந்தவர் குறித்து வெளியான பகீர் தகவல்!
இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் உள்ள கோர்ட்டில் கடந்த 24ஆம் திகதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரிகள் தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
லூதியானாவின் ஹனா பகுதியை சேர்ந்த கனங்தீப் சிங் பொலிஸ் துறையில் தலைமை காவலராக பணியாற்றியுள்ளார். இவருக்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்ததால் கடந்த 2019ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை அவரே நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மேலும் பொலிஸ் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.