லண்டனில் தாயும் மகனும் கத்தியால் குத்திக் கொலை., ஒருவர் கைது
வடக்கு லண்டனில் உள்ள வீடு ஒன்றில் பெண்ணும் ஐந்து வயது சிறுவனும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலியானவர்கள் தாயும் மகனும் என நம்பப்படுகிறது, கைது செய்யப்பட்ட நபருக்கு தெரிந்தவர்கள் என்று பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.37 மணியளவில் ப்ரூக்சைட் சவுத், பார்னெட்டில் உள்ள வீட்டில் இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்தது. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதையடுத்து, துணை மருத்துவர்களும், ஏர் ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டது.
இதையும் படிங்க: குரங்கம்மை தொற்றுக்கு எதிராக தடுப்பூசி! பிரித்தானியா அறிவிப்பு
37 வயதுடைய பெண் மற்றும் சிறுவன் இருவரும் கத்திக்குத்து காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட 37 வயதான ஒரு ஆண் கைது செய்யப்பட்டு மெட் சிறப்பு குற்றப்பிரிவு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறார். த
லைமை கண்காணிப்பாளர் சாரா லீச், "என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க சிறப்பு துப்பறியும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர், மேலும் ஒரு நபர் காவலில் உள்ளார்," என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: கடலில் மூழ்கிய ஹொங்ஹொங்கின் சின்னமான மிதக்கும் உணவகம்
மேலும் "இந்த சம்பவத்தில் வேறு எவரும் ஈடுபட்டுள்ளனரா என்பதைக் குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதை உள்ளூர் பகுதியில் வசிப்பவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
சம்பவத்தன்று அல்லது சமீப நாட்களில் வழக்கத்திற்கு மாறான எதையும் பார்த்தவர்கள் அல்லது கேள்விப்பட்டவர்கள் யாரேனும் காவல்துறையிடம் வந்து பேசும்படி கேட்டுக்கொள்கிறேன். விசாரணையின் முன்னேற்றத்திற்கு உங்கள் தகவல் முக்கியமானதாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022