செல்போன் தர மறுத்த 13 வயது சிறுவன்..கழுத்தை நெரித்து கொன்ற பெரியப்பா
தமிழக மாவட்டம் விருதுநகரில் சிறுவனை பெரியப்பா கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழுத்தில் சேலை சுற்றிய நிலையில்
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (54). இவரது வீட்டின் அருகே தம்பியின் குடும்பம் வசித்து வருகிறது.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த தம்பி லட்சுமணின் 13 வயது மகன் கார்த்திக், கழுத்தில் சேலை சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
வீடு திரும்பிய லட்சுமணனும், அவரது மனைவியும் மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது சிறுவன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. பின்னர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுவன் கார்த்திக்கின் பெரியப்பாவான ராமர்தான் கொலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
அதிர்ச்சி காரணம்
அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தனது காதலியை வீட்டிற்கு அழைக்க ராமர் சிறுவனிடம் செல்போன் கேட்டுள்ளார்.
ஆனால் சிறுவன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமர், அவனை அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார்.
இதில் சிறுவன் உயிரிழக்க, சேலையை சுற்றி விளையாடியபோது கழுத்து இறுக்கப்பட்டு சிறுவன் கார்த்திக் இறந்துவிட்டதாக அனைவரிடமும் ராமர் கூறியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |