மனைவியால் குழந்தைகளை கொன்று விட்டு தூக்கில் தொங்கிய கணவன்! வீடியோவை பார்த்து அதிர்ந்து போன உறவினர்கள்
தமிழகத்தில், தந்தை ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இறப்பதற்கு முன் மரத்தில் தொங்கும் வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் மங்களப்பட்டியைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் உணவகம் ஒன்றில் கடந்த 13 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் திடீரென்று ஏற்பட்ட விபத்து, காரணமாக காயமடைந்த அவர், கடந்த 10 நாட்களாகவே வீட்டில் இருந்து கொண்டு காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதற்கிடையில், அவருடைய மனைவி தொடர்ந்து தொலைப்பேசியில் பேசிக் கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த அவர் மனைவியிடம் இது குறித்து கேட்ட போது, இருவருக்கும் பிரச்சனை வெடித்துள்ளது.
யாராக இருந்தாலும் போனில் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து தொலைப்பேசியில் பேசி வந்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உடைந்து போன அவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை அருகில் இருக்கும் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு, தன் ஒன்பது வயது மகன் மற்றும் ஐந்து வயது மகள் என இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
உடன் மனைவியின் செல்போனையும் எடுத்து சென்றுள்ளார். அதன் பின் குழந்தைகளை கொன்றதாக கூறி, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், நீங்கள்(மனைவி) விரும்பியது இது தானே, நீங்கள் எங்களை கொலை செய்ய விரும்பினீர்கள், பாருங்க, நாங்கள் இப்போது இறந்துவிட்டோம் என்று கூறி, அந்த வீடியோவை தன்னுடைய உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது குறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், அங்கிருக்கும் மாம்பழ தோட்டத்தில் இவர்கள் சடலமாக தொங்குவதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.