குடும்பம் நடத்த அழைத்த கணவனுக்கு மறுப்பு தெரிவித்த பெண்.. திருமண நாளில் நேர்ந்த சோகம்
திருமண நாளில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவத்தால் அதிர்ச்சி
பெண் குடும்பம் நடத்த வர மறுத்ததால் கணவர் வெறிச்செயல்
தமிழகத்தில் திருமண நாளில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் அக்பர் காலனி தெருவைச் சேர்த்தவர் ராயப்பன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராயப்பன் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு வருடத்திற்கு முன்பே ரேவதி தனது கணவரை பிரிந்து சென்று தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த தம்பதியின் திருமண நாள் என்பதால், மனைவியை காண ராயப்பன் சென்றுள்ளார். அங்கு தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அவர் ரேவதியை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவிக்கவே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ரேவதியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், தப்பி ஓடிய ராயப்பனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.