இரண்டு பைகளில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்: 15 வயது மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
இந்திய மாநிலம் திரிபுராவில் 15 வயது மனைவியை கொலை செய்து, இரண்டு துண்டாக வெட்டிய காட்டில் வீசிய, நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
15 வயது மனைவி கொலை
திரிபுரா மாநிலம் அகர்டலாவை சேர்ந்த தனுஷா பேஹம், என்ற 15 வயது பெண்ணை காணவில்லை என அவரது தாயார் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர்.
@gettyimages
இந்நிலையில் தனுஷா பேஹமின் வீட்டில் ரத்தம் கசிந்திருப்பதை உணர்ந்த அவரது தாயார் உடனே காவல்துறையினரை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனுஷாவின் கணவரான கயீம் மியா என்பவரை கைது செய்துள்ளனர்.
@ndtv
பின்னர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், தனுஷாவை கொலை செய்ததை அவரது கணவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
காட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல்
மேலும் அவரை விசாரிக்கையில், தனுஷாவின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி, பையில் போட்டு அருகிலிருந்த காட்டுக்குள் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அங்கிருந்த இரண்டு பைகளை பார்த்துள்ளனர். அதில் ஒரு பையில் தலை மட்டும் துண்டாக இருந்திருக்கிறது.
@gettyimages
இன்னொரு பையில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும் மூன்றாவதாக யாரேனும் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என காவல்துறை விசாரித்து வருகிறது.