70 வருடங்களாக.. 'இரும்பு நுரையீரல்' மூலம் உயிர் வாழும் அதிசிய மனிதர்! மெய் சிலிர்க்க வைக்கும் தகவல்
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக இரும்பு நுரையீரல் மூலம் வாழ்ந்து வரும் நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க நகரில் உள்ள டெக்சாஸ் பகுதியில் வசித்து வருபவர் பால் அலெக்சாண்டர். இவருக்கு சிறு வயதில் இருந்தே சுவாசிப்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் அவரது 6 வயதில் ஏற்பட்ட போலியோ நோயால் அவருக்கு கழுத்து பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூச்சு விட மிகவும் சிரமபட்டதால் உறவினர்கள் இவரை மருத்துவனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இந்நிலையில் அங்கிருந்த மருத்துவர்களுள் ஒருவர் அவருக்கு tracheostomy என்னும் சிகிச்சையை மேற்கொண்டார். அப்போது தான் பால் அலெக்சாண்டருக்கு இரும்பு நுரையீரல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 18 மாதங்கள் மருத்துவமனையில் கழித்தார்.
இவரது வாழ்க்கை பயணத்தை மிட்ச் சம்மர்ஸ் என்பவர் ஒரு சிறிய ஆவணப்படமாக தயாரித்துள்ளார். அதில் பால் அலெக்சாண்டர் கூறியது, என்னோட நிலையை கண்டு அனைவரும் என்னை வெறுத்தனர். என்னுடன் பேச தயங்கினர்.
நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு எனது நிலையை காரணம் காட்டி கல்லூரியில் சேர்த்து கொள்ளவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து பல நிபந்தனைகள் அடிப்படையில் கல்லூரில் சேர்ந்து ஒரு வழக்கறிஞராகவும் பின்னர் சில வரலாற்று புத்தகங்களையும் எழுதியுள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும் உங்களுடைய கடந்தகால இயலாமையை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். அதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.