மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்து நிற்கும் பிரித்தானியர்! தடுப்பூசி போட மறுத்ததால் நேர்ந்த விபரீதம்
பிரித்தானியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய நாடான வேல்ஸில், தலைநகர் கார்டிஃபில் (Cardiff) வசிப்பவர் Francis Goncalves (43). இவர் தனது தாய், தந்தை மற்றும் சோகோதரர் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொரோனாவிற்கு பறிகொடுத்துவிட்டு பெரும் சோகத்தை அனுபவித்துவருகிறார்.
பிரான்சிஸின் தாய் Charmagne (65), தந்தை Basil (73) மற்றும் சகோதரர் Shaul (40) ஆகிய மூன்று பேரும் கோவிட் தடுப்பூசியை போடா மறுத்து, கொரோனா விதிமுறைகளுக்கு கடும் எதிர்பாளர்களாக போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில், பிரான்சிஸின் தந்தை கடந்த ஜூலை 6-ஆம் திகதி, சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக மருத்துவமனைக்கு சென்று வந்தார்.
அதன்பிறகு, ஜூலை 8-ஆம் திகதி அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்ட பிறகு, மூவருக்கும் உடல்நல கோளாறு ஏற்பட்டது.
பின்னர் ஓரிரு நாட்களில் அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, கோவிட் சோதனை செய்தனர். அதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதியானதால் ஜூலை 12-ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அடிப்படை சுகாதார நிலைகளைக் கொண்ட பசில், இரண்டு நாட்களுக்குள் கோமாவிற்கு சென்றதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார்.
உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய எந்த ஒரு பழக்கமும் இல்லாமால், ஆரோக்கியமாக இருந்ததாக கருத்தப்பட்ட சகோதரர் ஷவுல் ஜூலை 18-ஆம் திகதி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
அந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள், அடுத்த மூன்று நாட்களில் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்ட தாய் சார்மேன் ஜூலை 24-ஆம் திகதி இறந்தார்.
ஒரே வாரத்திற்குள் மூன்று உயிர்களும் கொரோனாவுக்கு இரையானது. கோவிட் காலத்தில் அவர்களது மூன்று பேரின் உடல்களைக் கூட கொண்டு வர முடியாமல், மருத்துவமனை மூலமாகவே அடக்கம் செய்தார் பிரான்சிஸ்.
தடுப்பூசியை போட மறுத்த ஒரே காரணத்தினால் ஒருவர் மொத்த குடுபத்தையும் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார். தடுப்பூசி குறைந்தது தனது தம்பியின் உயிரையாவது காப்பாற்றியிருக்கும் என பிரான்சிஸ் இப்போது மிகவும் வருந்துகிறார்.
பெரும் சோகத்தில் இருக்கும் பிரான்சிஸ், இனியாவது, மக்கள் சதி கோட்பாட்டாளர்களால் பரப்பப்படும் தவறான தகவல்களை மறுத்து, தடுப்பூசி போடுவதைப் பரிசீலிப்பார்கள் என்று நம்புவதாக கூறினார். இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.