மனைவிக்கு முன்னின்று இரண்டாவது திருமணம் செய்து வைத்த கணவன்! வெளியான அதிர்ச்சி காரணம்
இந்தியாவில் கணவர் தனது மனைவியை வேறு நபருக்கு பணத்தை வாங்கி கொண்டு திருமணம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு வந்த தம்பதி
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கீரா பெருக். இவர் மனைவி பூர்ணிமா. கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் திகதி தம்பதி டெல்லிக்கு வந்தனர், அங்கு தினக்கூலி வேலை செய்ய வந்தனர்.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் தனது மனைவி பூர்ணிமாவை நபர் ஒருவரிடம் பணத்துக்காக கீரா விற்பனை செய்துள்ளார். அதாவது அந்த நபருக்கும், பூர்ணிமாவுக்கும் கீராவே முன்னின்று திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்.
argusnews/kalingatv
காவல்துறை நடவடிக்கை
இந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் பூர்ணிமா சார்பில் கீரா கலந்து கொண்டார்.
இந்த நிலையில் பூர்ணிமா இது குறித்து தனது தந்தை குலாமணிக்கு தகவல் கொடுத்தார், அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் கீராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.