பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்! தட்டி கேட்டவருக்கு நேர்ந்த கொடுமை.. நடந்தது என்ன?
இந்தியாவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வடலா பகுதியில் வசித்து வருபவர் முகமது அன்சாரி. இவர் கடந்த ஆக்டோபர் மாதம் 1ஆம் திகதி அவரது வீட்டு வாசலில் உள்ள பொது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த முகமது ஷேக் என்ற வாலிபர் அவரது அருகே சென்று கழித்துள்ளார். இதை கண்ட அவர் ஏன் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த முகமது ஷேக் ஆத்திரத்தில் அவர் வைத்திருந்த கத்தியால் முகமது அன்சாரியை சரமாரியாக தாக்கிவிட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பித்து விட்டார்.
அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த அன்சாரியை மீட்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முகமது ஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.