35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடன் - 25,000 ஆக திருப்பி கொடுத்த நண்பர்
35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடனை 25,000 ஆக அவரதுநண்பர் தற்போது திருப்பி வழங்கியுள்ளார்.
1991 ஆம் ஆண்டில் வாங்கிய ரூ.1000
கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்மாயிலும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லச்சன்னாவும், 1991 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணி செய்த போது ஒரே அறையில் 5 ஆண்டுகள் தங்கி நண்பர்களாகியுள்ளனர்.

அப்போது, இஸ்மாயில் லச்சனாவிடம் இருந்து 120 சவூதி ரியால்களைக் கடனாக வாங்கியுள்ளார். அப்போது அதன் மதிப்பு இந்திய மதிப்பில் 1,000 ரூபாயாக இருந்தது.
லச்சண்ணா அதன் பின்னர் இந்தியா திரும்பிய நிலையில், அந்த காலக்கட்டத்தில் கைபேசிகளோ சமூக ஊடகங்களோ இல்லாததால், இருவரிடையேயான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.25,000 ஆக திருப்பியளித்த நண்பர்
ஆனால் அந்த கடனை மறக்காத இஸ்மாயில், அதனை திருப்பி தரவேண்டும் என நினைத்துள்ளார். லச்சண்ணா தெலுங்கானாவின் தர்மபுரியை சேர்ந்தவர் என்பது மட்டும் நினைவில் இருந்துள்ளது.

தர்மபுரிக்கு சென்ற அவர், அங்கு விசாரித்து லச்சண்ணாவின் வீட்டை கண்டுபிடித்து அப்போது வாங்கிய ரூ.1,000 ஐ, ரூ.25,000 ஆக அவரது குடும்பத்தினரிடம் திருப்பி வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் லச்சண்ணாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.
35 ஆண்டுகளுக்கு பின்னர், ரூ.1000 த்தை ரூ.35,000 ஆக திருப்பி வழங்கிய இஸ்மாயிலின் செயலை கண்டு லச்சண்ணா வியப்படைந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |