சிறுமியை சீரழித்து வீடியோ எடுத்த கொடூரனுக்கு தண்டனை விபரம் அறிவிப்பு! சிறுமியின் துணிச்சலுக்கு கிடைத்த பாராட்டு
அமெரிக்காவில் 8 வயது சிறுமியை சீரழித்து வீடியோ எடுத்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Newarkஐ சேர்ந்த டியாகோ அயலா (35) 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து அதை தனது செல்போனில் வீடியோ எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி அயலாவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அதிரடியாக தெரிவித்தார். 25 ஆண்டுகள் சிறை வாசம் முழுவதையும் அவர் அனுபவிக்க வேண்டும் எனவும் பரோல் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் நிகோல் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
தனக்கு நேர்ந்த கொடூரத்தை துணிச்சலாக முன் வந்து அவர் கூறியிருக்கிறார்.
அயலாவுக்கு கிடைத்துள்ள இந்த தண்டனை சிறுமிக்கு ஆறுதல் அளிக்கும் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.