லண்டனில் பரபரப்பு! சுரங்க ரயில் நிலைய வாசலில் ஒருவர் தீக்குளிப்பு!
பிரித்தானியாவில் வடக்கு லண்டன் பகுதியில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலைய வாசலில் நேற்று, ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டனில் கேம்டன் டவுன் (Camden Town) சுரங்க ரயில் நிலையத்தில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென மற்ற பயணிகளின் முன்னிலையில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக லண்டன் பெருநகர பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிஸார், லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் குழு, மருத்துவர்கள் குழு மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் வந்தனர். தீக்குளித்த நபர் மீதான நெருப்பை அணைத்து, விமான ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அந்த நபரின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதிபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் மனநலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சம்பவ இடத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்பகுதிக்கு 2 தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டதால், போக்குவரத்து சற்று தடைப்பட்டதாக கூறப்பட்டது