ஜேர்மனியில் நீதிமன்ற வளாகத்திலேயே பெண்ணை சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு
ஜேர்மனியில் நீதிமன்ற வளாகத்திலேயே பெண் ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று, ஜேர்மன் நகரமான Celleயில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றிற்கு ஒரு பெண்ணும் ஒரு ஆணும் வந்திருந்தனர்.
அந்த 78 வயது ஆண் ஒரு வீட்டில் குடியிருந்துள்ளார், அந்த 49 வயது பெண் அந்த வீட்டின் உரிமையாளர் ஆவார்.
வீடு காலி செய்வது தொடர்பில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதைத் தொடந்து அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். இருவருக்கும் இடையில் உறவு ஏதேனும் இருந்ததா என்பது குறித்து சரியாக தெரியவில்லை.
இந்நிலையில், திடீரென அந்த பெண்ணை சுட்டுக்கொன்ற அந்த நபர், தன்னையும் சுட்டுக்கொண்டுள்ளார். நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த இந்த பகீர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Achtung, wir haben eine polizeiliche Lage in der Mühlenstraße. Wir sind vor Ort. Bitte seht vorerst von Nachfragen ab. *bi pic.twitter.com/U5uRL0YJuQ
— Polizei Celle (@Polizei_CE) June 3, 2021