சிறுமியை பிடித்து சிமெண்ட் குவியலில் தள்ளி விட்ட கொடூரன்! கண்கள் முழுவதும் நிரந்தர பாதிப்பு... அடுத்து செய்த மோசமான செயல்
அமெரிக்காவில் 36 வயதான நபர் சிறுமியை அடித்து சிமெண்டுக்குள் தள்ளிவிட்டதோடு இன்னொரு பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
டிமோன்ஸ்வில்லை சேர்ந்தவர் ஜோ விடாகர் (36). இவர் சிறுமி ஒருவரை பிடித்து தாக்கி சிமெண்ட் குவிந்திருந்த இடத்தில் தள்ளிவிட்டிருக்கிறார்.
அதில் சிறுமியின் தலை முழுவதும் சிமெண்டுக்குள் சென்ற நிலையில் கண்கள் நிரந்திரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதோடு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் மற்றொரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்.
இந்த இரண்டு புகாரின் பேரில் பொலிசார் ஜோவை கைது செய்துள்ளனர்.
தற்போது ப்ளோரன்ஸ் கவுண்டி சிறையில் ஜோ ஜாமீனில் வெளியில் வரமுடியாத வகையில் அடைக்கப்பட்டுள்ளார்.