லண்டனில் பட்டப்பகலில் சற்று முன் நடந்த பயங்கரம்! மூடப்பட்ட இரயில் நிலையம்: வெளியான முக்கிய தகவல்
லண்டனில் இரயில் நிலையத்திற்கு வெளியில் நடந்த கத்தி குத்தி சம்பவத்தால், அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் வன்முறை சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த கத்தி குத்து சம்பவங்கள் சாதரணமாக நடக்கிறது.
இதைக் கட்டுப்படுத்த லண்டன் பொலிசார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், லண்டனில் கத்தி குத்து சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில், இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.50 மணியளவில் கிழக்கு லண்டனில் இருக்கும் West India Quay DLR இரயில் நிலையத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபரால் ஒருவர் தாக்கப்பட்டார்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பாதிப்புக்குள்ளான நபரை மீட்டு, அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக குறித்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இன்று பிற்பகல் 1.52 மணியளவில் West India Quay DLR இரயில் நிலையத்திற்கு வெளியே கத்தி குத்து சம்பவத்தால், ஒருவர் காயங்களுடன் இருப்பதாக தகவல் வந்தது.
இதை ஒரு ஆம்புலன்ஸ் குழுவினர், ஒரு மருத்துவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட நபருக்கு முதலுவதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், பிரித்தானியா போக்குவரத்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கத்து குத்தால் பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
இரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து யாரேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.