மதம் விட்டு மாதம் மாறி திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை! மக்கள் நடமாட்டம் பகுதியில் பகீர் சம்பவம்
இந்தியாவில் மதம்விட்டு மதம் மாறி திருமணம் செய்த புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை செய்யயப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த நாகராஜ் என்ற இளைஞனுக்கும் அஷ்ரூன் சுல்தானா (23) என்ற பெண்ணிற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்திற்கு ஒப்பு கொள்ளாத நிலையில் வீட்டை எதிர்த்து மணந்து கொண்டனர். இந்நிலையில் சரூர் நகரில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று இரவு 9 மணிக்கு நாகராஜூ தனது மனைவியுடன் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் நாகராஜூ சரிந்து கீழே விழுந்து துடிதுடித்து இறந்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நாகராஜூவின் கொலைக்கு பின்னணியில் அவரது மனைவியின் குடும்பத்தினர் உள்ளதாகவும், மதம் விட்டு மதம் திருமணம் செய்ததால் நாகராஜூவை அவர்கள் ஆணவக்கொலை செய்ததாகவும் அவரின் குடும்பத்தார், உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுல்தானா குடும்பத்தார் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்,