காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்..ஆத்திரமடைந்த காதலனால் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி!
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலிக்கு வேறொருவருடன் நிச்சயமானதால் ஆத்திரமடைந்த காதலன், புதுமாப்பிள்ளையை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியைச் சேர்ந்த பாண்டி மணி என்பவரும், சிவகங்கை நெற்குப்பையைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு அப்பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலமுருகன் என்பவருக்கும், பிரியதர்ஷினிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனை அறிந்த பாண்டி மணி, தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து போய், பாலமுருகன்-பிரியதர்ஷினியை ஒரு ஸ்டுடியோவில் வைத்து சந்தித்துள்ளார்.
Photo Credit: Getty Images/iStockphoto
அவர்களுடன் பாண்டி மணி வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானபோது, ஆத்திரமடைந்த பாண்டி மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக குத்தியுள்ளார்.
Photo Credit: Shutterstock
இதனால் பாலமுருகன் உட்பட 3 பேர் படு காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், பாண்டி மணி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.