கர்ப்பமான மனைவி..கருவை கலைக்க சொன்ன கணவர்..பின்னர் நடந்த விபரீதம்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் குடும்ப தகராறில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மனைவியுடன் தகராறு
கர்நாடக மாநிலம் கோலார் தாலுகா, தின்னேஒசஹள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (35). இவருக்கும் ஒசக்கோட்டையைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
சில நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அடிக்கடி இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். இந்த நிலையில் சவுந்தர்யா கர்ப்பமானதால் அதனை கலைக்கும்படி மஞ்சுநாத் கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தாயின் வீட்டிற்கு சவுந்தர்யா சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து சவுந்தர்யாவின் பெற்றோர் மஞ்சுநாத்திடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அவர் அவமானப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
சடலமாக கிடந்த கணவர்
இந்த நிலையில் கேலனூறு கேட் அருகே மஞ்சுநாத் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மஞ்சுநாத் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்தது. இதற்கிடையில் தங்கள் மகனின் இறப்புக்கு காரணம் சவுந்தர்யா மற்றும் அவரது குடும்பம் தான் என்று மஞ்சுநாத்தின் பெற்றோர் கோலார் புறநகர் பொலிஸிடம் புகார் அளித்துள்ளனர்.
File
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.