என் சாவுக்கு காரணம் மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தினர் தான்! சிக்கிய இளைஞரின் தற்கொலை கடிதம்
தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மனைவி குடும்பத்தாரின் தொல்லை தாங்க முடியாமல், பொறியாளர் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் பொலிஸில் புகார்
ஆவடி ஜே.பி. எஸ்டேட் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பொறியாளர் அவினாஷ்(33). சிறுசேரியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு பவித்ரா தேவி (29) என்ற மனைவி உள்ளார்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன் விளைவாக, 6 மாதங்களுக்கு முன்பு பவித்ரா தேவியின் குடும்பத்தினர் அவினாஷ் மீது மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பின்னர் பவித்ரா தேவி கணவரை விட்டு பிரிந்து, தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
Representative image
விவாகரத்து வழக்கு
இதனால் தனியாக வசித்து வந்த அவினாஷ், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மகளிர் பொலிஸார் மீண்டும் விசாரணைக்காக அவினாஷை அழைத்துள்ளார்.
அன்றைய தினம் அவினாஷ் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், அவினாஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிக்கிய கடிதம்
இதற்கிடையில், அவினாஷின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், 'எனது மனைவியின் குடும்பத்தின் அதிக நெருக்கடி கொடுக்கிறார்கள். விவாகரத்துக்கு நான் மனு செய்துள்ளேன். ஆனால் அடிக்கடி பொலிஸில் புகார் கொடுத்து என்னை விசாரணைக்கு அழைப்பதால், எனக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
எனது சாவுக்கு என் மனைவி, மாமனார், மாமியார், மனைவியின் தங்கை மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஆகியோர் தான் காரணம்' என அவினாஷ் எழுதி வைத்திருந்தார்.
குறித்த கடிதத்தைக் கொண்டு ஆவடி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மனைவியின் குடும்பத்தினரின் தொல்லை தாங்க முடியாமல் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.