இந்த பாம்பு தான் என் மனைவியை தீண்டியது! கையோடு விஷ நாகத்தை கொண்டு வந்த நபர்
இந்தியாவில் மனைவியை கடித்த பாம்பை கணவன் மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ராமேந்திரா யாதவ். இவர் மனைவி ரீனா நேற்று முன் தினம் தனது வீட்டு வேலையில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ரீனாவை தீண்டியது.
இதில் வலியால் அவர் அலறிய நிலையில் ராமேந்திரா மற்றும் குடும்பத்தார் ரீனாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்கு முன்னர் ரீனாவை கடித்த பாம்பை பிடித்த ராமேந்திரா அதை போத்தலில் அடைத்து மருத்துவமனைக்கு உடன் எடுத்து சென்றார்.
இதையடுத்து ரீனாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது, அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் ராமேந்திரா கையில் பாம்பை வைத்திருந்ததால் மருத்துவமனையில் இருந்த அனைவரும் அதிர்ந்தனர்.
எதற்காக பாம்பை எடுத்து வந்தீர்கள் என மருத்துவர்கள் ராமேந்திராவிடம் கேட்ட போது, என் மனைவியை என்ன பாம்பு கடித்தது என்று நீங்கள் கேட்டால் என்ன செய்வது? நீங்களே அதை பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் பாம்பைக் கொண்டு வந்தேன் என கூறியுள்ளார்.