லண்டன் பொலிஸாரின் மின் துப்பாக்கியில் இருந்து தப்பிக்க தேம்ஸ் நதியில் விழுந்த நபர் மரணம்!
பிரித்தானியாவில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு தேம்ஸ் நதியில் விழுந்த ஆடவர் இறந்துவிட்டதாக காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம் (IOPC) தெரிவித்துள்ளது.
சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பிரித்தானிய ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சனிக்கிழமையன்று லண்டனில் உள்ள செல்சியா பிரிட்ஜ் சாலையில் திருப்பளியை (screwdriver) ஆயுதமாக பயன்படுத்திய ஒருவர் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து புகார் அழிக்கப்பட்டதன் பெயரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
1/3 ⚠️ Trigger Warning : distressing content of the moment leading up to a man's death
— Operation Withdraw Consent (@OWC2022) June 5, 2022
We are saddened to learn that the Black Man repeatedly tasered by Met Police and pursued until he fell into the River Thames had died pic.twitter.com/uOhytw74L5
40 வயதிற்குட்பட்ட அந்த நபரை எச்சரித்த பொலிஸார், பின்னர் ஸ்டன் துப்பாக்கியை (stun gun) உதவியுடன் பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், டேசர் அவரை கட்டுப்படுத்தவில்லை, அதற்கு பதிலாக அவர் தப்பிக்கும் முயற்சியில் தேம்ஸ் நதியில் குதித்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதலில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது, ஆனால் அதே இரவில் அவர் மருத்துவமனையில் இறந்தார்.
இப்போது இந்த சம்பவம் தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடந்து வருகிறது. எதிர்பாராத இந்த சம்பவம் குறித்து, IOPC இயக்குநர் ஸ்டீவ் நூனன், "எங்கள் உண்மையான இரங்கலைத் தெரிவிக்கவும், எங்கள் ஈடுபாட்டை விளக்கவும் அந்த நபரின் குடும்பத்தினரிடம் நாங்கள் பேசினோம். இந்த பயங்கரமான நேரத்தில் எங்கள் அனுதாபங்கள் அவர்களிடம் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பாலத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து எங்களின் சுயாதீன விசாரணை நடந்து வருகிறது, நாங்கள் ஆதாரங்களை சேகரித்து மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.