குரங்கை விரட்டும் முயற்சியில் 2 வயது மகனின் உயிரை பறித்த தந்தை
தந்தை குரங்கை விரட்ட முயன்றதில் அவரது 2 வயது மகன் உயிரிழந்துள்ளார்.
2 வயது மகன் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏராளமான குரங்குகள் உள்ள நுழைந்துள்ளன.
குரங்குகளை விரட்ட முயன்ற வீட்டின் உரிமையாளர் லகான் சிங், கோடரியை எடுத்து வீட்டின் கூரை மேல் இருந்த குரங்கை நோக்கி வீசியுள்ளார்.
ஆனால், அந்த கோடாரி தவறுதலாக அவரது 2 வயது மகன் ஆரவ் கழுதை கழுத்தை அறுத்துள்ளது. இதில் குழந்தையின் ரத்தம் அங்குள்ள சுவற்றில் தெறித்துள்ளது.
சிகிச்சைக்காக, குழந்தையை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
கொலை என குற்றச்சாட்டு
இந்நிலையில், இது விபத்தல்ல லகான் சிங் அவரது மனைவி அனிதாவுடனான சண்டையில் மகனை கொலை செய்துள்ளார் என லகான் சிங்கின் மைத்துனர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான லகானின் உறவினர் ஜகத் சிங் சைனி, சமீபத்தில் லகானின் வீட்டில் கூடார வேலைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு கூரையில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டன.
குரங்குகள் கூரையிலிருந்து இரும்பு கம்பிகளை கீழே போட்டதாகவும், அவை குழந்தையின் தலையில் மோதியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், காவல்துறையினர் இதை ஒரு விபத்தாக தான் கருதியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |