பிரித்தானியாவில் கேஸ் வெடிப்பு: இடிபாடுகளில் சிக்கியவரை மீட்ட இளைஞர்கள்
பிரித்தானியாவின் மிடில்ஸ்ப்ரோவில்(Middlesbrough) உள்ள கர்க்லாண்ட் வாக் பகுதியில் (Kirkland Walk) செவ்வாய் மதியம் சந்தேகத்திற்கிடமான கேஸ் வெடிப்பு ஏற்பட்டு வீடு ஒன்று முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.
இந்த வெடிப்பில் சிக்கி 57 வயதான ஒருவர் படுகாயமடைந்து தீக்காயங்கள் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக, அப்பகுதி மக்கள் அவரை இடிபாடுகளில் இருந்து மீட்டு, சிகிச்சைக்காக Newcastle-லில் உள்ள ராயல் விக்டோரியா மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
வெடிப்பு காரணமாக கர்க்லாண்ட் வாக் மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். பரவலான பாதிப்பு இல்லை என்றாலும், அவ்விடத்தை அவசரகால சேவைகள் பாதுகாப்பாக மாற்றுவதற்கு உதவி செய்யும் வரை அப்பகுதியை தவிர்க்க அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
விபத்து நடந்த பகுதியின் அருகில் வசிப்பவர் ஒருவர், மூன்று இளைஞர்கள் துணிச்சலுடன் கத்தி கொண்டிருந்த மனிதனை இடிபாடுகளில் இருந்து இழுத்துச் சென்றதாக பார்த்ததாக தெரிவித்தார்.
இந்நிகழ்வை கண்டறிந்த கூரை வேலை செய்பவர் Kayfee Hameed என்பவரும் காயமடைந்த நபரை வெளியேற்றுவதில் உதவினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |