யாராவது உதவிக்கு வாங்க! பெற்றோர் சடலத்தை நாள் முழுவதும் வீட்டில் வைத்து கொண்டு அழுது கெஞ்சிய மகன்.. மனதை கலங்கடிக்கும் சம்பவம்

Death Corona virus Delhi Coivd 19
By Raju May 12, 2021 05:00 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவால் வீட்டில் பெற்றோர் இறந்த நிலையில் யாரும் உதவிக்கு வராததால் நாள் முழுவதும் அழுகி கொண்டிருந்த சடலத்துடன் மகன் கண்ணீருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தான் இந்த மனதை கலங்கடிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

லக்‌ஷ்மன் திவாரி என்ற நபரின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் திவாரி மற்றும் அவர் பெற்றோருக்கும் கொரோனா உறுதியாகி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். உடன் திவாரியின் 4 வயது மகனு இருந்தான்.

இந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி மாலை 4 மணியளவில் திவாரியின் தாயார் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

யாராவது உதவிக்கு வாங்க! பெற்றோர் சடலத்தை நாள் முழுவதும் வீட்டில் வைத்து கொண்டு அழுது கெஞ்சிய மகன்.. மனதை கலங்கடிக்கும் சம்பவம் | Man Watched His Parents Corpses Covid Death

இதன்பிறகு அடுத்த சில மணி நேரத்தில் அவரின் தந்தையும் உயிரிழந்தார். இதை தொடர்ந்து திவாரி தனது பெற்றோரின் சடலத்தை பார்த்தபடி அழுது கொண்டிருந்தார்.

அவரின் 4 வயது மகனும் தாத்தா, பாட்டியின் சடலத்தை பார்த்தபடி இருந்தான். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அக்கம்பக்கத்தினரிடம் சடலங்களை வெளியில் கொண்டு செல்வது தொடர்பாக திவாரி அழுது கொண்டே உதவி கேட்டுள்ளார்.

ஆனால் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை, ஏனெனில் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் யாரும் உதவ முன் வரவில்லை.

பின்னர் கொரோனா தன்னார்வலரான இர்டிசா குரேஷி (35) என்பவர் தகவல் அறிந்து திவாரி வீட்டுக்கு வந்தார்.

அவர் காவல் நிலையத்துக்கு சென்று கெஞ்சி கேட்டு உதவி கோரியும் பொலிசார் உதவவில்லை. திவாரி வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டரில் உடல்களை தகனம் செய்யும் சுடுகாடு இருந்த நிலையில் அருகில் இருந்த மருத்துவமனையின் ஊழியர்கள், ஆம்புலன்ஸ் என யாருமே உதவவில்லை.

ஒரு இடத்தில் ரூ 25,000 கொடுத்தால் ஆம்புலன்ஸ் தருவதாக கூறினார்கள், ஆனால் திவாரி குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்ததால் அதுவும் அவரால் தர முடியவில்லை.

இப்படி நாள் முழுவதும் இரண்டு சடலங்களும் வீட்டில் இருந்த நிலையில் அழுக தொடங்கி துர்நாற்றமும் வீச தொடங்கியது.

பின்னர் ஒருவழியாக குரேஷி அழைத்த ஒரு ஆம்புலன்ஸ் திவாரி பெற்றோர் சடலத்தை கொண்டு செல்ல ஒப்பு கொண்டு அங்கு வந்தது.

பின்னர் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டு முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

நான்கு வயது சிறுவன் தனது தாத்தா பாட்டிகளின் சடலங்களை ஏறக்குறைய ஒரு நாள் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதும், ​​அவனது தந்தை கெஞ்சி, அண்டை வீட்டாரிடம் உதவிக்காக மன்றாடியதை பார்க்கும் போதும் மனிதகுலத்தின் மீது கறை படித்துவிட்டது என நினைக்க தோன்றுகிறது. 

யாராவது உதவிக்கு வாங்க! பெற்றோர் சடலத்தை நாள் முழுவதும் வீட்டில் வைத்து கொண்டு அழுது கெஞ்சிய மகன்.. மனதை கலங்கடிக்கும் சம்பவம் | Man Watched His Parents Corpses Covid Death

மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US