20 டொலருக்கு வாங்கிய டிக்கெட்டில் 1 மில்லியன் டொலர் பரிசு வென்ற இளைஞர்
இளைஞர் ஒருவர் 20 டொலருக்கு வாங்கிய லொட்டரி டிக்கெட்டில் 1 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார்.
1 மில்லியன் டொலர் பரிசு
அமெரிக்காவின், கொலராடோவின் அலமோசாவில் வசிக்கும் ஜோனாதன் செல்போன் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக லொட்டரி வாங்கும் பழக்கமுடைய அவர், அதிகபட்சமாக 5 டொலர் மதிப்புள்ள ஸ்கிராட்ச் ஆஃப் டிக்கெட்டை வாங்குவார். அவர் வென்ற அதிகபட்ச தொகையே 20 டொலர் ஆகும்.

சமீபத்தில் அவரது வேலையின் கடினமான நாளின் போது, தனது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க அலமோசாவில் உள்ள வால்மார்ட் சூப்பர் சென்டரில் 20 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1,800) மதிப்புள்ள ஸ்கிராட்ச் ஆஃப் டிக்கெட்டை வாங்கினார்.
200X ஸ்க்ராட்ச் விளையாட்டு விளையாடி 1 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.9.25 கோடி) வென்றுள்ளார்.
கொலராடோ லாட்டரியின் படி, 10,80,000 இல் ஒரு வாய்ப்பு 1 மில்லியன் டொலரை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நினைக்காத ஒரு வாழ்க்கை
இது குறித்து பேசிய ஜோனாதன் தந்து வேலையில்லாத நாட்களையும், தங்க கூட இடமில்லாமல் கஷ்டப்பட்ட நாட்களையும் நினைவு கூர்ந்தார்.
தற்போது நிரந்தர வேலையும் தனது காதலி மற்றும் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான வீடு உள்ளதாகவும் கூறிய அவர், என் காதலிக்கும் குழந்தைகளுக்கும் நான் ஒருபோதும் சாத்தியமில்லை என்று நினைக்காத ஒரு வாழ்க்கையை நிச்சயமாக வழங்க திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்னர் எட்டாத சிறிய உபசரிப்புகள் மற்றும் அனுபவங்களை தனது குடும்பத்தினருடன் அனுபவிக்கும் அதே வேளையில், இந்த பணத்தை சரியான வழிகளில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |