பிரித்தானியாவில் குண்டு வெடிப்பில் தப்பிய பெண் மரணம்! பரிதாப சம்பவத்தின் பின்னணி: தாய் கண்ணீர்
பிரித்தானியாவில் பயங்கரவாதி நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் இருந்து தப்பிய 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தான்யாவின் மான்செஸ்டர் நகரில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் திகதி அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி Ariana Grande-ன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில், சல்மான் அபிதி என்ற தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில், 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அப்படி இந்த இசை நிகழ்ச்சிக்கு சென்று உயிர் தப்பியவர் தான் Eve Aston(20). இவர் Ariana Grande-வின் தீவிர ரசிகர் ஆவர். இந்த தாக்குதலுக்கு பின், PTSD-யுடன் போராடி வந்த இவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதை அவரின் குடும்பம் நிதி திரட்டும்(GoFundMe) பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். Wolverhampton-ஐ சேர்ந்த Eve Aston உயிர் படுக்கையிலே போயுள்ளது. இது குறித்து அவருடைய தாய் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
அவள் பிறந்ததிலிருந்து ஒரு ஜாலியான மகளாக இருந்தாள். அவளுக்கு மிகவும் வேடிக்கையான நகைச்சுவை உணர்வு இருந்தது மற்றும் அப்பாவின் செல்ல பெண். அவளைச் சுற்றி எப்போது நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். தன் சகோதரிகளுடன் அதிகம் நேரம் செலவிடுவாள்.
அப்படிப்பட்ட அவள், Ariana Grande இசைநிகழ்ச்சியை காணச் சென்றாள். அப்போது அங்கு நடந்த பேரழிவின் காட்சியைக் கண்டாள். அங்கிருந்து அவள் காப்பாற்றப்பட்டாலும், அந்த சம்பவத்திற்கு பின், சரியாக தூங்கவில்லை, அதிகமான சத்தத்தை அவளால் கேட்க முடியவில்லை. உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டாள்.
சமீப நாட்களில் அவள் உடல் எடை குறைய துவங்கியது. இதனால் நாங்கள் அவள் பழைய நிலைக்கு திரும்பிவிட்டாள் என்று நினைத்த போது, இறந்து கிடந்தால் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும், Eve Aston நல்லதொரு send off செய்ய குடும்பத்தினர் நிதி திரட்டி வருகின்றனர், இதற்காக அவர்கள் 4,500 பவுண்ட் நிர்ணயித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.