கருப்பான முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு பழம் போதும்: எப்படி பயன்படுத்துவது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகப்பொலிவை அதிகரிக்க மாம்பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. மாம்பழ பவுடர்
மாம்பழ தோல் எடுத்து வெயிலில் காய வைத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இந்த மாம்பழ பவுடரை முகத்தில் பயன்படுத்துவதால் அழுக்குகள் நீங்கும், சரும துளைகள் தடுக்கப்படும்.
மேலும், இயற்கையான முறையில் சருமத்தை பளபளக்க வைக்கலாம்.
2. மாம்பழ ஐஸ் கட்டி
மாம்பழ கூழை ப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றி எடுத்துக்கொள்ளவும்.
பின் அதை முகத்தில் துளை இருக்கும் இடத்தில் மென்மையாக தேய்த்தால் இழந்த பளபளப்பை உடனடியாக பெறலாம்.
3. மாம்பழ பேஸ்பேக்
மாம்பழத்தை நன்கு அரைத்து கூழாக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளலாம். இதனால் முகம் உடனடி பளபளப்பை பெறும்.
4. மாம்பழ ஸ்க்ரப்
மாம்பழத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
இதோடு ஓட்ஸ், தேன், தேங்காய் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி கலந்து முகத்தில் தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |