என்னிடம் கத்தி உள்ளது! லண்டன் பேருந்தில் ஏறி பெண் பயணி உள்ளிட்ட இருவரிடம் மோசமாக நடந்த நபர்... புகைப்படம்
லண்டன் பேருந்தில் இருந்த இரண்டு பயணிகளை மிரட்டி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
லண்டனின் கிரிக்கிள்வுட்டில் தான் இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி பகல் 1 மணியளவில் நடந்துள்ளது. அங்கு நின்றிருந்த ஒரு பேருந்தில் ஏறிய மர்ம நபர் இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண் அருகில் சென்று திடீரென சத்தமாக கத்திய நிலையில் அவர் பயந்து போனார்.
பின்னர் பாட்டிலில் இருந்து மதுவை அப்பெண் மீது கொட்டி விட்டு கீழே இறங்கியிருக்கிறான்.
இதையடுத்து உடனடியாக வேறு ஒரு பேருந்தில் ஏறி அதில் உட்கார்ந்திருந்த பயணி ஒருவரிடம், என்னிடம் கத்தி உள்ளது! உன் செல்போனை எனக்கு கொடுத்துவிடு என மிரட்டிவிட்டு திடீரென இறங்கி சென்றுள்ளான்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி குறித்த புகைப்படம் மற்றும் தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி கருப்பு நிறத்தில் அவன் இருப்பான் எனவும் உயரம் 6 அடி 2 அங்குலம் இருக்கும் எனவும் முகத்தில் தாடி இருக்கும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி மேட் கேனான் கூறுகையில், நல்லவேளையாக இந்த இரண்டு சம்பவங்களில் யாருக்கும் இந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
ஆனால் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் ஆடி போய்விட்டனர்.
இதில் தொடர்புடைய நபர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.