ஒரே நாளில் டிரெண்டான புகைப்படம்! இதன் பின்னணி என்ன?
தனது தங்கையை மடியில் படுக்கவைத்தபடி, பள்ளியில் பாடத்தை கவனித்துவரும் 10 வயது சிறுமியின் புகைப்படம் வைரலானது.
மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் நாகா இனமக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
இங்குள்ள டைலாங் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மெய்னிங் சின்லியு பேமே(10 வயது) என்ற சிறுமி படித்து வருகிறார்.
பொருளாதார நெருக்கடி காரணமாகவும், தொடர்ச்சியான வறுமை காரணமாகவும் பெற்றோர் இருவரும் விவாசயத் தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே வீட்டில் இருக்கும் தன்னுடைய தங்கையை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாமல் தனது தங்கையையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்திருக்கிறார்.
தங்கையை மடியில் படுக்கவைத்தபடி, இவர் பாடத்தை கவனிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
தகுந்த நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு, சிறுமியின் துயரங்களை மீட்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் வலுத்தது.
இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் மாநில அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை குழந்தைக்கு ஆதரவு கரங்கள் நீட்டத் தொடங்கின.
Her dedication for education is what left me amazed!
— Th.Biswajit Singh (@BiswajitThongam) April 2, 2022
This 10-year-old girl named Meiningsinliu Pamei from Tamenglong, Manipur attends school babysitting her sister, as her parents were out for farming & studies while keeping her younger sister in her lap. pic.twitter.com/OUIwQ6fUQR
இதுகுறித்து மணிப்பூர் விவசாயத் துறை அமைச்சர் பிஸ்வாஜித் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வியில் இந்தச் சிறுமியின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது..!” என்று பதிவிட்டுள்ளார்.
சிறுமியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நெட்டிசன்களில் ஒரு பிரிவினர் சிறுமியின் கல்வி ஆர்வத்தை பாராட்ட, மற்றொரு பிரிவினர் வறுமையை புனிதப்படுத்தாதீர்கள், அந்தச் சிறுமி இடையூறு இல்லாமல் கல்வியைத் தொடர வேண்டிய உதவிகளை செய்வதே உகந்தது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங் தனது முகநூல் பக்கத்தில், " சிறுமியின் குடும்பத்தினருக்கு தேவையான அவசர உதவிகளை செய்து கொடுக்க குழுவை அனுப்பப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் பயன்களை மேலும் எவ்வாறு நீட்டிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எனது அமைச்சரவை சகா உடனடியாக சிறுமையின் குடும்பத்தை சந்தித்த செய்தியைக் கேள்விப்பட்ட போது, மகிழ்ச்சியான உணர்வு ஏற்பட்டது" என்று பதிவிட்டார்.