நிர்வாணமானது மணிப்பூர் பெண்கள் அல்ல, அரசு..!கலங்கிய பெண் ஊடகவியலாளர்கள்
மணிப்பூரில் ஆண்கள் கும்பல் ஒன்று இரண்டு பெண்களை ஆடைகளை களையச் சொல்லி, அவர்களை நிர்வாணமாக சாலையில் நடக்க வைத்து, அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை அடிமையாக்கி கொச்சைப்படுத்துவது ஏன்?
மன்னர் காலம் தொட்டு இன்று வரை சாதிய அடக்குமுறையாக இருந்தாலும் சரி, மத ரீதியான அடக்குமுறையாக இருந்தாலும் சரி, அடக்குமுறையின் ஆயுதங்களாக பெண்களை பயன்படுத்தும் அவல நிலை தொடர்ந்து வருவது வேதனை தருகிறது, இவ்வாறு பெண்களை கொச்சைப்படுத்தி அடிமைப்படுத்துவது ஏன்?
100 ஆண்கள் சூழ்ந்து இருந்து இரண்டு பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை ஒரு சில ஆண்கள் கூட தட்டி கேட்க முன்வராதது ஏன்?
ஒரு பொய்யான செய்தியின் வீச்சம் இவ்வளவு பெரிய விளைவுகளை விதைக்கும் போது உண்மையை தேடும் கண்கள் எங்கே சென்றது?
மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினால் மோடி ஏதாவது என்னை செய்து விடுவார் என்றும் அச்சப்படும் இளம்பெண்ணின் அரசியல் நிலை எந்த எதிர்காலத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது?
இதுப் போன்ற பல கேள்விகளுக்கு மத்தியில் IBC தமிழ் நடத்திய விவாத நிகழ்ச்சி குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.